அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விளக்கம்: “நான் பேசியதாக பகிரப்படும் ஆடியோ ‘போலி’, மெளனம் காக்க இதுதான் காரணம்”


படக்குறிப்பு,

பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்

அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ ‘போலி’ என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன்.

சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்,” என்றவாறு ஒருவர் பேசுகிறார்.

அந்த ஆடியோவில் பேசியவர் தமிழ்நாடு நிதியமைச்சர் தியாகராஜன் தான் என்று சவுக்கு இணையதள ஆசிரியரும் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஊழியருமான சங்கர் தெரிவித்திருந்தார். அந்த ஆடியோவை வெளியிட்டது தாம் தான் என்றும் இதுபோல மேலும் சில ஆடியோக்களை விரைவில் வெளியிடப்போவதாகவும் சங்கர் கூறியிருந்தார்.

இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையானது.



source

leave your comment

Your email address will not be published. Required fields are marked *

Tags

bse hdfc வங்கி indusind வங்கி macd MSME NIFTY Paytm s&p500 sensex stock market அமெரிக்க பங்குகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தமிழ் ஆசிய பங்குகள் ஆர்பிஐ இன்ஃபோசிஸ் இன்று சுவர் தெரு இன்று நிஃப்டி ஊட்டி எங்களுக்கு பங்குகள் ஐசிசி வங்கி சந்தை சந்தை கண்ணோட்டம் சந்தைக்கு முன்னால் சந்தை செய்தி சுவர் தெரு சுவர் தெரு கண்காணிப்பு சென்செக்ஸ் சென்செக்ஸ் இன்று செபி டவ் ஜோன்ஸ் டாடா மோட்டார்கள் தலால் தெரு நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்குகள் பங்கு சந்தை பங்கு பரிந்துரைகள் பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி முதலீட்டாளர்கள் வர்த்தகர்கள் வர்த்தக வழிகாட்டி வாங்க வேண்டிய பங்குகள்

Recent Ads

Top