பிளஸ் டூ 2 முடித்தவர்களா? SSC தேர்வுக்கு தாமதமின்றி விண்ணப்பிக்கவும்-சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
பிளஸ் டூ 2 முடித்தவர்களா? SSC தேர்வுக்கு தாமதமின்றி விண்ணப்பிக்கவும்-சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: மத்திய அரசின் தென்மண்டலப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு 2023 (நிலை-1) ஆகஸ்ட் மாதம் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஐபி (டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர்) போன்ற பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை எதுவும் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இந்தத் தேர்வாணையத்தின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (ssc.nic.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08.06.2023. (23:00) ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி 10.06.2023 (23:00). ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.
தென்னக பகுதிகளில் கணினி மூலம் நடைபெறும் இந்தத் தேர்வு 22 மையங்களில் ஆகஸ்ட் – 2023-ல் நடைபெறுகிறது. ஆந்திரா மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 மையத்திலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறவுள்ளது.

பணியாளர் தேர்வாணையம் 09.05.2023 அன்று “ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) தேர்வு, 2023”க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழு C பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வை ஆணையம் நடத்தும். கீழ் கோட்ட எழுத்தர்/இளைய செயலக உதவியாளர், மற்றும் இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு அமைப்புகள்/சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றுக்கான டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.